search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிகுண்டு பீதி"

    தாய்லாந்து செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த கோவா மாணவர்கள் வெடிகுண்டு இருப்பதாக பீதி கிளப்பினர். அவர்களிடம் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்ல விமானம் தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக கோவாவை சேர்ந்த தீபக் (வயது 22) உள்பட 5 கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்.

    இவர்கள் சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏற செல்லும் 7 அடுக்கு பாதுகாப்பு சோதனையில் இறுதிக்கட்ட சோதனையை செய்தனர்.

    அப்போது எங்களை ஏன் சோதனை செய்கிறீர்கள்? எங்களது உடைமைகளில் தான் வெடிகுண்டு வைத்திருக்கிறோம் என்று கூறினர்.

    இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அடிக்கடி சோதனை செய்ததால் விளையாட்டாக வெடிகுண்டு இருப்பதாக கூறினோம் என தெரிவித்தனர். இதையடுத்து 5 மாணவர்களையும், விமான நிறுவன அதிகாரிகள், விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடிகுண்டு இருப்பதாக மாணவர்கள் கிளப்பிய பீதியால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
    சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் புறப்பாடு பகுதியில் 2-வது நம்பர் கேட் அருகே 3 துணிப்பைகள் கேட்பாரற்று கிடந்தன.

    நீண்ட நேரமாக அங்கு கிடந்ததால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    போலீஸ் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் துணிப்பை பரிசோதிக்கப்பட்டது. அதில் வெடிகுண்டு இல்லை. ஆனால் பயன்படுத்தும் பழைய ஆடைகள் மட்டுமே இருந்தன.

    இதற்கிடையே அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். மேற்கு வங்காளத்தை சேர்ந்த அவர்கள் கொல்கத்தா செல்ல நேற்று இரவே இங்கு வந்து தங்கியிருந்ததாக கூறினர். டீ குடிக்க சென்ற போது தங்களது பைகளை இங்கு வைத்து சென்றதாக தெரிவித்தனர். எனவே அவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.

    பைகள் கிடந்த பகுதியில் போலீசார் யாரையும் நடமாட விடவில்லை. பலத்த கெடுபிடி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×